ஜன கண மன மலையாள சினிமா...
மதவாத அரசியல், கபட ஜனநாயக அரசியல், பெருமுதலாளிகளின் ஊடகங்கள் மற்றும் அரசி யல் அதிகார பீடங்களுக்கிடையிலான கள்ள உறவு, மத்தியப் பல்கலை.களில் பூடகமாய் நின்றாடும் சாதிய வன்மம், போலீசின் ‘‘மோதல்கொலை’’களின் ஆபத்தான போக்கில் உண்மைகள் மூடிமறைக்கப்படும் அபாயம் என இன்றைய ஜனநாயகம் சிதைத்துச் சீரழிக்கப்படும் அவலத்தைப் பல்வேறு கோணங்களில் அலசும் திரைப்படம் ‘‘ஜன கண மன’’. அரவிந்த் சுப்பிரமணியன் சட்டம் படித்த ஐபிஎஸ் அதிகாரி. ராமநகர மாவட்ட போலீஸ் அதிகாரியாக பணிபுரி கிறார். ராமநகரில் 2013இல் நடந்த கலவரத்தில் 136 பேர் இறக்கிறார்கள். அரசு இவரின் தலைமையில் விசாரணை கமிஷனை நியமிக்கிறது. காவிக்கட்சியை சேர்ந்த ராகவேந்திரராவ் தான் இக்கலவர சூத்திரதாரி என்பதை கண்டறிந்து, அறிக்கை சமர்ப்பிக்கிறார். இக்கலவர பின்புலத்தில் நடந்த தேர்தலில் காவிக்கட்சி ஆட்சி அமைத்து ராகவேந்திரராவே உள்துறை அமைச்சராகவும் ஆகிறார். அரவிந்தை பழி வாங்க துடித்த ராவ், தனது உள்துறையின் மூலம் பொய் வழக்கு போட்டு, கைது செய்து, சிறையில் அடைக்கிறான். மனைவியும் மர்மமாக கொல்லப்படுகிறார். காலம் ஓடுகிறது. 2019இல் ராமநகர மாவட்ட ஏசிபி ஆக ஷஜன்குமார் பணியேற்கிறார். மனைவியை பிரிந்து வாழ்பவர். மகன் இவரது பராமரிப்பில். ஒடுக்கப்பட்ட சமூகத்தைச் சார்ந்த சத்யா, ராமநகர பல்கலைக்கழகத்தின் ஆராய்ச்சி மாணவி. இவரது வழிகாட்டி பேராசிரியர் விதார்சன். இவ னது விருப்பத்திற்கு அனுசரித்து போகாததால் இவளது ஆராய்ச்சிக் கட்டுரையை ஏற்க மறுக்கிறான்.அவளை கேலி யும் செய்கிறான். “உன்னுடைய குலத்தொழிலுக்கு மட்டும் தான் நீ லாயக்கு” என அவளை கேவலப் படுத்துகிறான். மனமுடைந்த சத்யா, “எனது பிறப்பே, எனது குற்றம்; எனது சாவுக்கு பேராசிரியர் விதார்சனே காரணம்” என குறிப்பு எழுதி, தற்கொலை செய்து கொள்கிறாள்.
சத்யாவைக் காணாமல் அவளது தந்தை தேடி அலைகிறார். பேராசிரியர் சபாமரியம்,இவருக்கு உதவுகிறார்.சத்யா தங்கிய அறையை பரிசோதிக்கையில் அவர் எழுதிய தற்கொலை குறிப்பு கிடைக்கிறது. துணை வேந்தர் தலைமையில் கவுன்சில் கூட்டம் நடக்கிறது. கூட்டத்தில் சபா,மாணவி சத்யாவின் மர ணத்தில் சந்தேகம் உள்ளது.ஏற்கனவே 52 பேர் இங்கு இறந்துள்ளனர். முழுமையாக விசாரிக்க வேண்டும் என்கிறார். கோரிக்கை ஓட்டெடுப்புக்கு விடப்படுகிறது.எவரும் ஆதரவு அளிக்கவில்லை. வெறுப்படைந்து, ஆளுநருக்கு புகார் அளிப்பதாகக் கூறி வெளியேறுகிறார். இரவில் தனியாக ஸ்கூட்டரில் சென்று கொண்டிருந்த சபாவை, பேராசிரியர் விதார்சன் தனது காரை ஏற்றி படுகொலை செய்கிறான். இதே நேரத்தில், உள்துறை அமைச்சர் ராகவேந்திர ராவின் பேரன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள் ளான். ராகவேந்திரராவ், ஏசிபி ஷஜன்குமார் மற்றும் உளவுத்துறை அதிகாரிகள் உள்ளனர். ராவிடம், வருகின்ற சட்டமன்ற தேர்தலில் ஆளும் காவிகட்சி தோற்கும் என உளவுத்துறை அதிகாரிகள் கூறுகிறார்கள். ராவ் கடும் கோபத்திற்குள்ளாகிறான். எப்படியாவது இந்த தேர்தலில் வெற்றி பெற்று முதல்வர் ஆக வேண்டும் என்று கத்துகிறான். அப்போது ஏசிபி ஷஜன்குமாருக்கு பேராசிரியர் சபா இறந்த செய்தி கிடைக்கிறது.பேராசிரியர் பிணத்தை வைத்து அரசியல் செய்தால், ஆளும் கட்சி மீதான மக்கள் கோபத்தை திசை திருப்பலாம் என, அமைச்சரிடம் ஒரு சதியோசனை கூறுகிறான். அதற்கு அமைச்சர் இசை வளிக்கிறான். சதியின்படி, 4 ரவுடிகளை அமர்த்தி, போலீஸ் உதவியுடன் இந்த நால்வரும், இறந்த பேராசிரியரின் உடலை எரிக்கிறார்கள்.
பிணம் எரிந்து கொண்டிருக்கும் போதே, உள்துறை யின் செல்வாக்கை பயன்படுத்தி முக்கிய பத்திரிகைகள், டெலிவிஷன் சேனல்களில் “பேராசிரியர் கற்பழித்து எரித்துக் கொலை” என பொய்யான தலைப்பு செய்திகள் அச்சிலேறுகிறது. மறுநாள் மாணவர்கள் தங்களது பேராசிரியர் சபா கற்பழிக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட செய்திகள் கண்டு அதிர்கிறார்கள். போராட்டம் வெடிக்கிறது.ஏசிபி ஷஜன்குமார் இதனை திட்டமிட்டு கலவரமாக மாற்று கிறான். போலீஸ் பல்கலைக்கழக வளாகத்திற்குள் சென்று தடியடி நடத்தியதால், மாணவத்தலைவி கௌரி மற்றும் கிஷோர் படுகாயம் அடைகின்றனர். போராட்டம் நாடு முழுவதும் பரவுகிறது. கலவரத்தை அடக்க, அரசு விசாரணைகமிஷன் அமைக்கிறது. ஷஜன்குமார் இதன் தலைவராகிறார். விசார ணையை விரைவுபடுத்துகிறார். இவரது திட்டப்படி, பிணத்தை எரித்த நால்வரை கைது செய்கிறார். அவர்கள் தான் கற்பழித்து கொலை செய்து எரித்ததாக போலி அறிக்கை அளிக்கிறார். சமூக ஊடகங்கள், பத்திரிகை கள், தொலைக்காட்சி விவாதங்கள் ஷஜன்குமாரை பாராட்டுகிறது. இந்நிலையில் ஷஜன்குமாரின் மகன், பதிவு எண் இல்லாத கார் மோதி படுகாயம் அடைகிறான். கவலை யில் உள்ள ஷஜனுக்கு அடுத்த அடி விழுகிறது.இவரை விசாரணை கமிஷனிலிருந்து உள்துறை விடுவிக்கிறது. ஆணையை ரத்துசெய்ய உள்துறை அமைச்சரிடம் பேசுகிறார். அவரோ ‘‘நான் தான் ஆணையிட்டேன்; உடனடியாக அந்த நால்வரையும் முடித்துவிடு” என உத்தரவிடுகிறார். ஷஜனோ, நால்வரை கோர்டில் ஒப்படைப்போம் எனக்கெஞ்சுகிறான். அமைச்சர் மறுக்கிறார். தயக்கத்துடன் ஷஜன்குமார், நால்வரையும் மோதல் கொலை செய்கிறான். பத்திரிகைகள் மற்றும் தொலைக் காட்சிகளில் ‘‘மோதல்கொலை’’ தலைப்புச் செய்தியா கிறது. ஷஜன் சமூகத்தில் பாராட்டவும் படுகிறான்; கடுமை யான விமர்சனத்திற்கும் உள்ளாகிறான். மோதல் கொலையை, எதிர்த்து தேசிய மனித உரிமைக் கமிசன் விசாரணைக்கு உத்தரவிடுகிறது. இவ்வழக்கு மீண்டும் ராமநகர மாவட்ட நீதிமன்றத்திற்கு வருகிறது. அரசு வழக்கறிஞராக அட்வகேட் ரகுராமன் ஐயர் ஆஜரா கிறார். எதிரி வழக்கறிஞராக 5வருட சிறைத்தண்டனைப் பெற்ற அட்வகேட் அரவிந்த் சுப்பிரமணியன் ஆஜராகிறார்.
ஒரு நாட்டின் கவுரவம் பெண்களை கௌரவப் படுத்துவதில் தான் உள்ளது என்று ஐயர் வாதத்தை துவக்கு கிறார். அரவிந்தோ, குற்றம்சாட்டப்பட்ட நால்வரையும் நீதிமன்றத்தில் ஆஜராக்காமல், போலீஸே சட்டத்தை கையில் எடுத்து மோதல்கொலை செய்ததை, கேள்வி எழுப்புகிறார். பத்திரிகைகள், தொலைக்காட்சிகள் தீர்ப்பெழுதி, போலீஸ் தண்டனை வழங்கினால், நீதிமன்றம் எதற்கு எனக்கேள்வி கேட்டு,தொடர்புடைய அனைவரையும் குறுக்கு விசாரணை செய்கிறார். ஷஜன், தனது பாசமான மகனை கொலை செய்ய எத்தனித்தது அமைச்சர் என்பதை அறிந்து துடிக்கிறான். துரோகம் இழைக்கப்பட்டதை எண்ணி வருந்துகிறான். இனிமேலாவது நிம்மதி வேண்டுமென்றால் உண்மையை உலகறியச்செய்யவேண்டும் என முடிவெடுக்கிறான். எனவே விசாரணையின் போதே, முக்கிய கோப்புகளை, காவலர் மூர்த்தி மூலம் அரவிந்துக்கு கடத்தி, தனக்குத் ்தானே சிலுவையில் ஏறுகிறான். அரவிந்தின், திறமையான விவாதம் வழக்கிற்கு பலமாகிறது.ஷஜன்குமார் குற்றவாளி என தீர்ப்பாகி கைது செய்யப்படுகிறான்.சபாவை கொலை செய்த பேராசிரியர் விதார்சனும் கைது செய்யப்படுகிறான். தேர்தல் வருகிறது. உள்துறை அமைச்சரும், முதல மைச்சர் வேட்பாளருமான நாகேஸ்வரராவ் காவிக்கட்சி சார்பாக, ராமநகர தொகுதியில் வேட்புமனு தாக்கல் செய்கிறார். இவரை எதிர்த்து மாணவர்கள் தலைவி கௌரி வேட்புமனு தாக்கல் செய்கிறார். பிரச்சாரத்தின் போது இறந்த சபா,சத்யா உள்ளிட்ட 52 மாணவ ஒவியங்களின் பின்புலத்தில் “என்றென்றும்” என்ற வாசகம் அடங்கிய சுவரோவியத்தின் நெருக்கமான காட்சியோடு படம் முடிகிறது. போலீஸ், கௌரியை தடியால் தாக்கும்போது, வேடிக்கை பார்ப்போரை உங்கள் மௌனமே போலீசுக்கு அளிக்கப்பட்ட உரிமம் எனக்கூறுவது மௌனிகளுக்கு சவுக்கடி. பேராசிரியர் சபா,”கேலரியிலிருந்து கேள்வி கேட்பதை விட, களத்தில் போய் வேலை செய்”என கௌரியிடம் சொல்வது வாய்ச்சொல் வீரர்களுக்கு பொருந்தக் கூடியது. காவலர் மூர்த்தி சிறையில் ஷஜனை சந்திக்கையில், தண்டனைக்கு பின்பே நிம்மதியாக தூங்குவதாக ஷஜன் கூறுவது, பட நாயகன் ஷஜன் என்பதை உறுதிப்படுத்து கிறது.
இப்படத்தின் இயக்குநர் டிஜோ ஜோஸ் அண்டனி, அரவிந்த் சுப்பிரமணியன் ஆக நடித்துள்ள பிரிதிவிராஜ், ஷஜன் குமாராக நடித்துள்ள சுரஜ்,சபா மரியம் ஆக நடித்துள்ள மம்தா மோகன்தாஸ், நீதிபதியாக நடித்துள்ள சிட்டி, உள்துறை அமைச்சர் ராகவேந்திர ராவ் ஆக நடித்துள்ள ஜி.எம்.சுந்தர், மாணவி கௌரியாக நடித்துள்ள வின்சிஅலோசியஸ், துணைவேந்தர் பவன் ஷெட்டியாக நடித்துள்ள ராஜேஷ் பாபு, ஆகியோர் எழுந்து நின்று கைதட்டிப் பாராட்டப்படவேண்டியவர்கள். “நீதிபதி”அறையில் செல்போனில், “தங்கச்சி மகளுக்கு செயிண்ட் ஜோசப் கல்லூரியில் கம்ப்யூட்டர் சயின்ஸ் சீட் கிடைத்தால் போதும்.இக்கல்லூரியில் சீட் கிடைப்பதே பெரிய விஷயம்.ரொம்ப நன்றி”என யாரிடமோ பேசுவார்.(!,?) ஆந்திராவில் ஒரு பெண் மருத்துவரைப் பாலியல் வன்கொடுமை செய்து எரித்துக் கொன்ற நால்வரை போலீஸ் “மோதல் கொலை” செய்தது; மத்திய பல்கலை. ஆராய்ச்சி மாணவர் ரோகித் வெமூலாவின் தற்கொலை; சென்னையிலுள்ள இந்திய தொழில்நுட்பக் கல்லூரியில் பயின்று வந்த கேரள மாணவி பாத்திமா தன் சாவுக்குக் காரணம் பேராசிரியர்களின் தொந்தரவே எனத் தற்கொலைக் குறிப்பில் பதிவிட்டிருந்தது எனப்பல நிகழ்கால உண்மைச் சம்பவங்களை இப்படத்தின் காட்சிகள் நினைவு படுத்துகின்றன. இளைய தலைமுறையின் எழுச்சியே,இந்திய தேச விடியல் என்பதை உணர்த்தும் விதமாகவே, இறுதிக் ்காட்சியில் “இன்குலாப் ஜிந்தாபாத்”என்ற மாணவர் தலை வரின் முழக்கம் இருக்கிறது. அவசியம் பார்க்க வேண்டிய படம்.